மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண்
அனிதா எம்.பி.ஏ. பட்டதாரி. இவரது கணவர் மோகன் பெங்களூரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். மாமனார்,மாமியார் கொடுமைப்படுத்துவதாக
சீர்காழி பெண்கள் காவல் நிலையத் தில் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார் அனிதா.
இந்நிலையில் இன்று மாமனார் ராமர், மருமகளை கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்துவிட்டார். தான் உயிருடன் இருக்கும்போதே தனது சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்கும்படி என் மகனிடம் மருமகள் சண்டைபோட்டு வந்தார். இதனால் ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டேன் என்று போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார் ராமர்.
ஒருமணி நேரத்தில் அனிதாவின் உடல் எரிக்கப்பட்டுவிட்டது.