புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மே, 2013



சீமானும் வைகோவும் பிச்சை எடுத்தால் பிழைக்கலாம்!!

இவர்களுக்கு தமிழ் மக்கள் தொடர்பில் அக்கறை இல்லை. இவர்களின் வேலை எப்படி அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக குழிபறிப்பது என்பதுதான். திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சம்பந்தன் எம். பி. எப்போதாவது அங்குள்ள தென்னமர வாடி கிராமத்துக்கு  சென்றதுண்டா ? அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டதுண்டா ? அதனை நிறைவேற்றியதுண்டா ?

இப்படிப் பட்டவர்களை தான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தமிழ் மக்களாக  நினைத்து பிரதிநிதிகளை வரவேற்கிறார்கள்.  சீமானும் வைகோவும்  இலங்கையைக் காட்டி வயிறு வளர்க்கிறார்கள். வைகோ இங்கு  வந்தால் கிழக்கு மாகாணத்தில் விளைந்த தரமான நெல்லின் வைக்கோலை அவருக்கு உண்ணக் கொடுப்போம் இல்லாவிட்டால் சீமானும் வைகோவும் இங்கு வந்து தெவட்டஹா பள்ளி வாசல் முன்பாக வெள்ளைத் துண்டை விரித்து பிச்சை எடுத்தால் நன்றாகப் பிழைத்துக் கொள்ள முடியும்.

இலங்கையில் தமிழ் மெல்லன வளர்கிறது.  கம்பவாரிதி ஜெயராஜ் கம்பன் விழாவை தலைநகரில் நடத்தவுள்ளார். அது மிக சிறப்பாக நடக்கும் என்பதில் ஐயமில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்  தமிழ் வளர்ந்து கொண்டு வருகின்றது.ஆட்டோக்களில் செல்வோரை எதிரணிக் கட்சியில் வைத்துக் கொண்டுதான் இந்த நாட்டின் பெரும்  எதிர்க்கட்சியான ஐ. தே. க. இந்த நாட்டை ஆள முயற்சிக்கின்றதா ?

மகிந்தவிடம் பிச்சை எடுத்து பிழைக்கும் இந்த அஸ்வர்  மட்டவர்களை எப்படி சொல்கிறார்   தன்னையும் தன்  மதத்தையும் வித்து பிழைக்கும் இவர்கள் சொல்வதை எல்லாம் கேக்க வேண்டி உள்ளது . தமிழனின் நிலைமை அப்படி உள்ளது

ad

ad