தீக்குளித்த பிக்கு சிகிச்சை பலனின்றி மரணம்!
கண்டி தலதா மாளிகைக்கு முன்பாகவே மாடுகள் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை அவர் தீ மூட்டிக்கொண்டார்.
வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே அவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார்.
அங்கிருந்த பொதுமக்கள் பிக்குவை மீட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் மேலதிக சிகிச்சைகளுக்கான கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையிலேயே பிக்கு சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்து விட்டதாக பணிப்பாளர் தெரிவித்தார்.