புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2013

மக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
2012ம் ஆண்டுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை அ
றிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கும் தமது கட்சிக்கும் எதிராக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை வான் கடத்தல்கள், காணாமல் போதல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புகளைப் பேணுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஈ.பி.டி.பி. கட்சி எந்தவிதமான அடக்குமுறைகளிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைக் காலமாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் அமெரிக்க அரசாங்கமும் ஈ.பி.டி.பி. கட்சியின் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad