புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2013

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுமி மரணம்!- யாழ் உரும்பிராயில் சம்பவம்!
யாழ் உரும்பிராய் பகுதியில் வேப்பமரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி 14 வயதுச் சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உரும்பிராய் மேற்குப் பகுதியைச் சேர்ந்த  காந்தன் சாளினி என்ற சிறுமியே உயிரிழந்தவராவர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று செவ்வாய்கிழமை மாலை வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தவேளை குறித்த சிறுமியின் கயிறு கழுத்தில் சிக்கியுள்ளது.
சிறுமியை உடனடியாக மீட்டெடுத்து உறவினர்களினால் உடனடியாக   யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிறுமியின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை புதன்கிழமை இச்சிறுமியின் சடலம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுசன் தெரிவித்துள்ளார்.

ad

ad