புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2013

பிரபல திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் காலமானார்! என் சடலத்தின் மீது புலிக்கொடி போர்த்த வேண்டும்!- மணிவண்ணனின் கடைசி ஆசை

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் (வயது 59)  மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார்.
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள
அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மணிவண்ணன், அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியிருந்த நிலையிலேயே இன்று மரணமடைந்துள்ளார்.
நூறாவது நாள், 24 மணி நேரம், கோபுரங்கள் சாய்வதில்லை, அமைதிப்படை என தமிழில் 50 படங்களை இயக்கியவர் மணிவண்ணன். 400 க்கும் அதிகமான படங்களில் நடித்தும் உள்ளார்.
அண்மையில்தான் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை-2 படம் வெளியாகி இருந்தது.
திமுக தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில், 'பாலைவன ரோஜாக்கள்' என்ற படத்தையும் அவர் இயக்கி உள்ளார்.
இதுவரை ஈழத் தமிழருக்காக குரல்கொடுத்து வந்த தலைமகனின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். அன்னாரது குடும்பத்தினருக்கு ஈழத்தமிழினம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
2ம் இணைப்பு
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59.
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்துவந்தார். இன்று பகல் 12 மணிக்கு வீட்டில் இருந்தபோது, முதுகு வலிப்பதாக கூறியவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.. அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து உயிரிழந்தார்.
குடும்பம்
மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மணிவண்ணன், அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியிருந்த நிலையிலேயே இன்று மரணமடைந்துள்ளார்.
50 படங்களை இயக்கியவர்
கோபுரங்கள் சாய்வதில்லை இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமாகும். தொடர்ந்து இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, அமைதிப்படை, 24 மணி நேரம், ஆண்டான் அடிமை உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.
400 க்கும் அதிகமான படங்களில் நடித்தும் உள்ளார்.
அண்மையில்தான் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை-2 படம் வெளியாகி இருந்தது.
இவர் இயக்கிய 'பாலைவன ரோஜாக்கள்' திமுக தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில் வெளியானது.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனர்
பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவிடம் சேர்ந்து உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிவண்ணன், பின்னர் தனியாக திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள், டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதையும் எழுதி உள்ளார்.
இறுதிச் சடங்கு
மணிவண்ணனின் மறைவுக்கு தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்இ நடிகைகள் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
நெசப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அவரது இறுதி சடங்கு நாளை நடக்கிறது.
தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளர்
ஆரம்பக் காலங்களில் திமுக அபிமானியாக இருந்த மணிவண்ணன், பின்னர் வைகோ மதிமுகவை தொடங்கிய போது அவருக்கு ஆதரவளித்தார்.
தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளரான மணிவண்ணன், முள்ளிவாய்க்கால இறுதிப்போருக்கு பின்னர், சீமானின் நாம் தமிழர் கட்சி மேடைகளில் முழங்கி வந்தார். மேலும் பல்வேறு ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களிலும் பங்கேற்று வந்தார்.
கோவையை சேர்ந்தவர்
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். அந்த மண்ணுக்கே உரிய நக்கல், நையாண்டி மணிவண்ணனிடம் தூக்கலாக காணப்படும்.
3ம் இணைப்பு
என் சடலத்தின் மீது புலிக்கொடி போர்த்த வேண்டும்!- மணிவண்ணனின் கடைசி ஆசை
நடிகர் சத்யராஜ் உடன் இணைந் அமைதிப்படை, மணிவண்ணனின் திரையுலக வாழ்வில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
இப்படத்தின் விழா ஒன்றில் பேசிய மணிவண்ணன், ‘’நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன்.
தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன். என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடி வருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக்கூடாது.
என் உடம்பை சீமானிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும்.
என் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை’’ என்று கூறினார்.

ad

ad