புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2013

வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் இருந்து இலங்கை இராணுவ வீரர்கள் வெளியேற்றம்
குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் இருந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அண்மையில், பல்வேறு அரசியல் கட்சி சார்பில் வெலிங்டன் இராணுவ முகாம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், வெலிங்டன் இராணுவ பயற்சி முகாமை நாளை முற்றுகையிட போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.

இதனிடையே, வெலிங்டன் இராணுவ பயிற்சி முகாமில் இருந்த இலங்கை இராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ad

ad