புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2013

யாழ்.மானிப்பாயில் 12 வயது மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற முதியவர்: மரத்தில் கட்டி தாக்கிய பொதுமக்கள்
யாழ். மானிப்பாய் பிரதேச கட்டுடைப் பகுதியில் 12 வயது பாடசாலை மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படத்த முயற்சித்த முதியவர் ஒருவரை அப்பகுதி மக்கள் பனை மரத்துடன்
கட்டி வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று வியாழக்கிழமை காலை 7.45 மணிக்கு மானிப்பாய் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிக்கு தனிமையில் கட்டுடை பிரதேசத்திலிருந்து சென்று கொண்டிருந்த மாணவியை துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் ஒருவர் அவரைப் பற்றை ஒன்றிக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.
குறித்த மாணவி சத்தம்போட்டு கதறியதால் அயலிலுள்ளவர்கள் இந்த முதியவரைத் துரத்திப் பிடித்து பனை மரத்துடன் கட்டி வைத்து பச்சை மட்டையினால் தாக்கியுள்ளனர்.
இதன் போது முதியவரின் கை எலும்பு முறிவடைந்துள்ளதுடன், அவருக்கு உடம்பில் பல பகுதிகளிலிருந்து இரத்தம் கசிந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த முதியவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவி பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ad

ad