புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2013

டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜெயலலிதா அறிவிப்பு
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலில்
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று (17.06.2013) கடைசி நாளாகும். நாளை வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படுக்கிறது. வேட்புமனுவை திரும்பப் பெற ஜூன் 20ஆம் தேதி கடைசி நாளாகும்.

அதிமுக சார்பில் 5 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளர். திமுக சார்பில் கனிமொழி தாக்கல் செய்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி.ராஜா இன்று வேட்பு மனுவை தாக்கல்செய்தார்.
மனுத்தாக்கல் செய்யும் முன்பு தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை டி.ராஜா சந்தித்தார். அப்போது தனக்கு ஆதரவு அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். 
இந்தநிலையில் மாநிலங்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.ராஜாவுக்கு அஇஅதிமுக ஆதரவு அளிக்கும் என்றும், ஏற்கனவே அஇஅதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தங்கமுத்து தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என்றும் ஜெயலலதா அறிவித்துள்ளார்.

ad

ad