புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2013

அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம்
 


நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலையைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி (28) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதே ஏரியாவைச் சேர்ந்த முனிஷ் (25) என்பவர் கருப்பசாமியின் நண்பர். 


கருப்பசாமி வீட்டில் இல்லாத போது வந்த முனிசுக்கும், முத்துலட்சுமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பு வரை நீடித்தது இதையறிந்த கருப்பசாமி தன் மனைவியைக் கண்டித்ததோடு முனிஷ் நட்பைத் துண்டித்தார் அதன் பிறகும் அவர்களது கள்ள உறவு நீடித்தது.
நேற்று முன்தினம் இரவு காட்டுப்பகுதியில் முத்துலட்சுமியும், முனிசும் உல்லாசமாக இருந்ததைப் பார்த்து ஆத்திரமான கருப்பசாமி அதே இடத்தில் முத்துலட்சுமியை வெட்டிக் கொன்றார்.
முனிஷ் தப்பி ஒடி விட்டார். இது தொடர்பாக சிவகிரி போலீசார் கருப்பசாமியைக் கைது செய்தனர்.
தான் கொலை செய்வதற்கான காரணத்தைப் போலீசாரிடம் வாக்கு மூலமாகவே கொடுத்துள்ளார் கருப்பசாமி.

அதில், எனது மனைவி, முத்துலட்சுமியின் கள்ளத் தொடர்பைக் கண்டித்த நான், நமக்கு 2 குழந்தைகள் இருக்கு கள்ளத் தொடர்பு வெளிய தெரிஞ்சா உலகம் வேற மாதிரியாப் பேசும். புள்ளைக எதிர்காலம் பாதிக்கும் கள்ளத் தொடர்ப விட்டுறுன்னு பக்குவமாச் சொன்னேன். ஆனா, அதுக்கு அவ, உடன்படல நான் அவனோட தாம் போவேன் உன்னால ஆனதப் பாருன்னு எடுத்தெறிஞ்சி பேசுனா. புத்திமதியக் கேட்காம நேற்று காட்டுல ரெண்டு பேரும் உல்லாசமாயிருந்தப் பார்த்து ஆத்திரத்தில வெட்டிக் கொன்னுட்டேன். என்று சலனமில்லாமல் கூறியுள்ளார். என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.  

ad

ad