புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2013


பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் ரூபா என்பவருக்கு சொந்தமான குரங்கு தினமும் பிள்ளை களுடன் பள்ளிக்கு செல்கிறது. வீட்டுப்பாடம் உள்பட அனைத்தும் செய்கிறது.

மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா, பிளுகலி கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் உணவு தேடி குழந்தையுடன் தாய் குரங்கு ஒன்று வந்தது. சில நாட்கள் கிராமத்தில் தங்கி இருந்த தாய் குரங்கு, தனது பெண் குட்டி குரங்கை கிராமத்தில் அனாதையாக விட்டு சென்று விட்டது.

தாயின் அரவணைப்பு இல்லாமல் தவித்த குட்டி குரங்கை கிராமத்தில் வசிக்கும் மகாதேவப்பா,ரூபா தம்பதியர் எடுத்து வளர்க்க ஆரம்பித்தனர். அதற்கு தினமும் பால், பழம், உணவு கொடுத்து பராமரித்தனர். பின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகி விட்ட குரங்கிற்கு ராணி என்று பெயர் சூட்டி மகிழ்ந்ததுடன், தங்கள் பிள்ளையை போல், பேணி காத்து வருகிறார்கள். ரூபா சொல்லி கொடுக்கும் அனைத்தையும் தவறாமல் குட்டி குரங்கு ராணி செய்து வருகிறது.

தினமும் காலை 6 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழும் குரங்கு, மகாதேவப்பாவுடன் வயல்வெளி செல்கிறது. காலை கடனை முடித்த பின், காலை 8.30 மணிக்கு வீட்டிற்கு வருகிறது. ரூபாவின் பிள்ளைகள் குளிக்கும்போது, அவர்களுடன் சேர்ந்த குளித்தபின், காலை உணவு எடுத்து கொள்கிறது.

ரூபா மற்றும் அவரது பிள்ளைகளுடன் பள்ளிக்கு செல்கிறது. மாலை வரை பள்ளியில் இருந்தபின், ரூபாவுடன் வீடு திரும்புகிறது. பிள்ளைகள் பால் காபி குடித்தால், குரங்கிற்கு பால் கொடுக்கிறார்கள். அதை குடித்தபின், ரூபாவின் பிள்ளைகளுடன் ஹோம் ஒர்க் செய்கிறது. தனது கையில் பேனாவை அழகாக பிடித்து, சொல்லி கொடுப்பதை நோட்டில் எழுதுகிறது.

வாரம் முழுவதும் பள்ளிக்கு செல்லும் குரங்கு, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ரூபாவுடன் வயல்வெளிக்கு செல்வது, மார்க்கெட் ஷாப்பிங் செல்வது உள்பட பல பணிகளில் ஈடுபடுகிறது. மாலை நேரத்தில் கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் விளையாடுவதை யும் வழக்கமாக கொண்டுள்ளது.

மனிதர்கள் செய்யும் அனைத்து செய்கைகள் மட்டுமில்லாமல், அனைத்து குணங்களும் குட்டி குரங்கு ராணிக்கு இருப்பதால், ரூபா குடும்பத்தில் மட்டுமல்ல, பிளுகலி கிராமத்தின ரின் செல்ல குழந்தையாக மாறியுள்ளது. கிராமத்தில் நடக்கும் கோயில் விசேஷம் மட்டுமில்லாமல், வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சியிலும் விருந்தாளியாக குடும்ப பாசத்துடன் கலந்துகொள்கிறது


ad

ad