புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2013

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறப் போவதில்லை!– தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 கட்சிகள் இன்று பம்பலப்பிட்டியில் உள்ள தமது அலுவலகத்தில் கூடி இந்த முடிவை எடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று இடம்பெற்ற கூட்டத்தில் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு இடம்பெறவிருந்த போதும் அந்த தெரிவு மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad