மரக்காணம் கலவரத்தில் உடனடி நடவடிக்கை: ஜெ.,விற்கு புரட்சி பாரதம் பாராட்டு
புரட்சி பாரதம் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தியாகராயநகரில் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் கீழ்கண்ட தீர்மானங்கள்
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இனத்தை சேர்ந்த தனபாலை பேரவை தலைவராக நியமனம் செய்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. தனியார் மற்றும் பொதுத் துறைகளில் இட ஒதுக்கீடு அமுல்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டு கொள்ளுதல், அம்மா உணவகம் அனைத்து நகராட்சிகளிலும் சாலை ஓரங்களிலும் கொண்டு வர அரசை வலியுறுத்தல்.
தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் திண்ணை வாத்தியாராக திகழும் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பூவை முகிலன், ஏழுமலை, மாறன், திருவேங்கடம், சிவஞானம், தாமஸ் பர்னபாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.