புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2013

போலி கடவுச்சீட்டுடன் இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்னை விமானநிலையத்தில் கைது
போலி கடவுச்சீட்டுடன் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்னை விமானநிலையத்தில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இலங்கைக்கு புறப்படவிருந்த விமானத்தில் ஏற முயன்ற போதே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
51 வயதான ஜமால் என்ற இலங்கை பொலிஸ் அதிகாரியான இவர்  நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
தமிழ் பேசும் இந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்து இலங்கை தமிழர்களோடு சேர்ந்து இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
கடவுச்சீட்டு இல்லாத காரணத்தினால் இவரால் இலங்கைக்கு திரும்ப முடியவில்லை.
இலங்கையிலுள்ள ஜமாலின் மனைவி அனுப்பிய போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு திரும்ப முயன்றபோதே இவர் விமான நிலைய அதிகாரிகாரிகளால் தடுக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்

ad

ad