புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2013

நவீனரக கணனிகள், கைத்தொலைபேசிகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது
டுபாய் நாட்டிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமான முறையில் டெப்லட் கணனிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்தி வந்த நபர் ஒருவரை இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டுபாயிலிருந்து இலங்கை வந்த ஸ்ரீலங்கன் எயார் 226 விமானம் மூலமே குறித்த நபர் இலங்கைக்கு இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வந்திறங்கிய போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட இவரிடம் இருந்து 785  கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 34 டெப்லட் கணனிகள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர்.
தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான நபரொருவரே இவற்றைக் கடத்தி வந்துள்ளதாகவும்,கடத்தல்கள் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை சுங்கப் பிரிவினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad