புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் விடயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை!- ஆனந்தசங்கரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் விடயத்தில் எனக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லையென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட 13வது திருத்த சட்டத்தில் கைவைக்கும் உரிமை இலங்கைக்கு இல்லை. இந்தியாவிற்கும இல்லை.
13வது திருத்தத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும், அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று கூறும் தேரர்கள் எங்கிருந்து வந்தவர்கள். இவர்களுக்கு அரசியல் தெரியுமா?
இந்தியாவிலுள்ள மாநில ஆட்சி முறையிலான தீர்வே தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும். இதனை நான் பல முறை கூறியுள்ளேன்.
நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றேன். ஆனால் என்னுடைய 50 வருட அரசியல் அனுபவத்தை கூட்டமைப்பு பயன்படுத்துவதில்லை.
பல நாடுகளுக்கு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் செல்கின்றனர். ஆனால் என்னிடம் எதுவும் சொல்வதில்லை. என்னிடம் ஒன்றும் ஆலோசனையும் கேட்பத்தில்லை. தேவைகளுக்காக மட்டும் என்னைப் பயன்படுத்துகின்றனர் என்றார்.

ad

ad