புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2013

ராஜினாமாவை திரும்ப பெற்றார் அத்வானி: ராஜ்நாத் சிங் தகவல்
பா.ஜ.,விலிருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, தனது முடிவை வாபஸ் பெற்றுவிட்டதாக பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். 


அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத் சிங், மோடி விவகாரத்தில் அத்வானி சமரசம் அடைந்து விட்டதாகவும், ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என்ற கட்சியின் வேண்டுகோளை ஏற்று ராஜினாமாவை திரும்ப பெற்றதாகவும் கூறினார். மேலும் அவர், அத்வானியின் கூறியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும், அத்வானியிடம் ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறினார்.

ad

ad