புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2013

வர்த்தகர் கொலை தொடர்பில் வாஸ் குணவர்தன கைது செய்யப்படலாம்
பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு வடக்குப் பிராந்தியத்திற்கு பொறுப்பாக வாஸ் குணவர்தன கடமையாற்றி வருகின்றார்.
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த சியாம் என்ற வர்த்தகர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாஸ் குணவர்தனவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்ற விசாரணைப் பிரிவினர் வாஸ் குணவர்தனவிடம் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வாஸ் குணவர்தனவிடம் விசாரணை நடத்தப்படுகின்றது.
கடந்த 6ம் திகதியும் வாஸ் குணவர்தனவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

ad

ad