புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2013

சந்திரிகா - சரத் பொன்சோ கூட்டு அரசியல்!- அரசாங்கத்து​க்கு அதிர்ச்சி வைத்தியம
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் நோக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் சரத் பொன்சேகாவின் தலைமையிலான கட்சியின் சார்பில் சந்திரிகாவுக்கு நெருக்கமான சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களும் போட்டியிடவுள்ளனர்.
இலங்கையில் ஆகக்கூடுதலான இராணுத்தினர் வசிக்கும் பிரதேசம் என்பதால் குருநாகல் மாவட்டத்தில் தமது கூட்டணி இலகுவாக வெற்றிபெறும் என்றும் இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இது தொடர்பான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் சந்திரிகாவின் ஹொரகொல்லை இல்லத்தில் நடைபெற்றதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

ad

ad