புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2013


வி.சி.சுக்லா உயிரிழந்தார்
 

முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா சத்தீஷ்கர் மாநிலத்தில்
கடந்த 25-ந் தேதி மாவோ யிஸ்டுகள் தாக்குதலில் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது உடலில் 3 குண்டுகள் பாய்ந்ததால் கவலைக் கிடமான நிலையில் இருந்தார்.


இதற்காக விமானத்தில் டெல்லி அருகே குர்கான் கொண்டு செல்லப்பட்டு மெஜந்தா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேசன் மூலம் குண்டுகள் அகற்றப்பட்டன. மூச்சு திணறல் ஏற்பட்டு தொடர்ந்து அபாய கட்டத்தில் இருந்ததால் மருத்துவ கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டது.
இந்த நிலையில் அவரது சிறுநீரகங்கள் செயல் இழந்ததால் டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. இதனால் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. தொடர்ந்து அவர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் மருத்துவ கருவிகள் உதவியுடன் அவரை கண்காணிப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ad

ad