புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2013

பெப்சி உமா புகார்: நிகழ்ச்சி தயாரிப்பாளர் கைது
சென்னை கிண்டி அருகே தனியார் தொலைக்காட்சியில், நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து வருகிறார் பெப்சி உமா. இவருடைய நிகழ்ச்சிக்கு தயாரிப்பு மேலாளராக
சரவணகுமார் என்பவர் பணியாற்றினார். நிகழ்ச்சி தயாரிப்பு காரணமாக இருவரும் அடிக்கடி ஆலோசனை நடத்துவார்கள்.

இதற்கிடையே சரவணகுமார் ஆபாசமாக பேசியதாக பெப்சி உமா வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் சென்னை கிண்டியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். 
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், சரவணகுமார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். 
 

ad

ad