புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2013

யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல்: வேட்பாளர் பட்டியல் விபரம் இணைப்பு
வட மாகாணசபைத் தேர்தலுக்காக யாழ் மாவட்டத்தில் தேசியக் கூட்டமைப்பு இன்று பகல் 12.30 மணியளவில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள்  யாழ். கச்சேரிக்கு சென்று  வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.

€மக்களுடைய ஒத்துழைப்பின் மூலமே 13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்: சீ.வி.விக்னேஸ்வரன்
தமிழ்தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை தேர்தல் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் யாழ்.தேர்தல் திணைக்களத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்திருக்கின்றது.
கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வீ.விக்னேஸ்வரன், கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிறேமச்சந்திரன், சுமந்திரன், உள்ளிட்ட குழுவினர் மேற்படி வேட்பு மனுத்தாக்கலை நண்பகல் 12.மணிக்கு செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கலின் பின்னர் ஊடகங்களுக்கு பேசிய முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஷ்வரன்,
புதிய பயணத்தை ஆரம்பித்து விட்டோம் 25வருடங்கள் வடக்கில் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த தருணத்தில் மக்களுடைய ஒத்துழைப்வே அவசியமாகின்றது. அதன் மூலமே 13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். ஒற்றுமையாகவும், ஒத்துழைப்புட னும் உங்கள் ஆதரவு தளத்தை ஏற்படுத்தவேண்டும்.
நீண்டகாலம் தமிழ் மக்களால் தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்டி வளர்க்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கில் அமோக வெற்றி பெறும், அதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் வேட்பு மனுவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சற்று முன்னர் தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பாளர் விவரம்,
யாழ். மாவட்டம்
சி.வி.விக்னேஸ்வரன் (முதன்மை வேட்பாளர்)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம்
பாஷையூரைச் சேர்ந்த இ.ஆனல்ட்
சாவகச்சேரியைச் சேர்ந்த சட்டத்தரணி ச.சயந்தன்
வடமராட்சியைச் சேர்ந்த பொறியிலாளர் சிவயோகன்
யாழ். மாநகர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்
யாழ். மாநகர சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி
யாழ். மாநகர சபை உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம்
விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவரான எழிலனின் மனைவி ஆனந்தி
தமிழரசுக் கட்சி இளைஞர் அணி யாழ். மாவட்டத் தலைவர் பா.கஜதீபன்
காரைநகரைச் சேர்ந்த தம்பிராசா
கரவெட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம்
வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம்
வர்த்தக சங்கத் தலைவர் இ.ஜெயசேகரம்
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனின் சகோதரர் சர்வேஸ்வரன்
சூழலியாலாளர் பொ.ஐங்கரநேசன்
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த குகதாசன்
வடமராட்சியைச் சேர்ந்த ச.சுகிர்தன்
வவுனியா மாவட்டம்
எம்.எம்.ரதன்
செந்தில்நாதன் மயூரன்
எஸ்.தியாகராஜா எம்.பி.நடராஜா எஸ்.ரவி
ஜி.ரி.லிங்கநாதன்
எஸ்.மோகன்
ஆர்.இந்திரராஜா
வைத்திய கலாநிதி எஸ்.சத்தியலிங்கம்
மன்னார் மாவட்டம்
அந்தோணி சூசைரட்ணம் சிறிமோ சாய்வா சு.சிவகரன்
ஞானசீலன் குணசீலன்
இருதயநாதன் சார்ள்ஸ் நிர்மலநாதன்
திரிசோத்திரம் நிமலசேகரம்
ஜோசப் ஆனந்த குரூஸ்
பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன்
அய்யும் அஸ்மின்
முல்லைத்தீவு மாவட்டம்
ரி.ரவிகரன் எம்.அன்ரனி ஜெயநாதன்
க.சிவநேசன் (பவான்)
ஜு.கனகசுந்தரசுவாமி
வைத்தியர் சிவமோகன், கமலேஸ்வரன்
திருமதி குணசீலன் மேரிகமலா
உடையார்கட்டைச் சேர்ந்த ஆண்டிஐயா புவனேஸ்வரன்
கிளிநொச்சி மாவட்டம்
வீ.ஆனந்த சங்கரி,
ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர்கள் தம்பிராசா குருகுலராஜா,
பசுபதி அரியரத்தினம்
சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை,
திருலோகமூர்த்தி,
பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம்,
திருமதி மினுபானந்தகுமாரி கேதுரட்ணம்

ad

ad