புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2013


கவிஞர் வாலி கவலைக்கிடம்
 

பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி ( வயது 82) நுரையீரல் தொற்றுநோய் காரணமாக  கடந்த 30 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கடந்த ஜுன் 8ம் தேதி அன்று வசந்தபாலனின் தெருக்கூத்து படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் எழுதிக்கொடுத்தார்.  அதன்பிறகு வீடு திரும்பியவர் அன்று இரவே உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இடையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
நடிகர் கமல், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் மருத்துவமனை சென்று உடல்நலம் விசாரித்தனர்.  இந்நிலையில் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரின் உடல்நிலையில் நேற்றி ரவு திடீரென பின்னடைவு ஏற்பட்டது.  உடனடியாக அவருக்கு  வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது.  தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வாலி கவலைக்கிடமான இருக்கும் செய்தி அவரது ரசிகர்களை கவலையடைய வைத்திருக்கிறது.

ad

ad