இளவரசனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் யார்?
தர்மபுரி இளவரசனின் உடல் ஆய்வு அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர் குழுவின் அடிப்படையில் இளவரசனின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.கடந்த முறை பிரேத டாக்டர்கள் அல்லாமல் வேறு டாக்டர்கள் பரிசோதனை செய்வார்கள் என்றும், அந்த டாக்டர்கள் யார் என்றும் உயர்நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.