புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2013

விஜயகாந்த் நடந்து கொண்ட முறை சரியில்லை! நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி கருத்து!
நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்களை அடுத்து நாகர்கோவில் கோட்டாறில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் விஜயகாந்துக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.


முதல் அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நாகர்கோவில் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆஜரானர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞருக்கும், தேமுதிகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. 
இதையடுத்து அரசு வழக்கறிஞர் கோட்டாறு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளில் விஜயகாந்த் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 
விஜயகாந்த் மீது தொடரப்பட்ட கொலை முயற்சி வழக்கைத் தொடர்ந்து, அவர் முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மாலா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, மனுவை ஏற்றுக் கொண்டு, நிபந்தனை அடிப்படையில் முன் ஜாமீன் வழங்கியது. மறு உத்தரவு வரும் வரை, சென்னை பெருநகர நீதிமன்றத்தில் தினமும் நேரில் ஆஜராகி விஜயகாந்த் கையெழுத்திட்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் நடந்து கொண்ட முறை சரியில்லை என்றும், நீதிமன்றத்தில் இதுபோன்று நடந்துகொள்வது கண்டனத்துக்கு உரியது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

ad

ad