புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2013

இலங்கை தமிழர் விவகாரம் : ஜெயலலிதாவுக்கு மன்மோகன்சிங் பதில் கடிதம்
இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழர்களின் நலனைக் காக்க மத்திய அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் எழுதியுள்ள பதில்
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, இலங்கை தமிழர்களின் நலனைக் காக்க வலியுறுத்தி, கடந்த 14ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.


இந்த கடிதத்துக்கு பதில் எழுதியுள்ள பிரதமர், ’’இலங்கை தமிழர் நலன் காப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என்பதை இலங்கை அரசிடம் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தொடர்ந்து அதனை செய்வோம்.
இலங்கையில்  தமிழர்கள் சுய மரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்’’என்று கூறியுள்ளார்.

ad

ad