மறைந்த அதிமுக எம்.எல்.ஏ., குடும்பத்தினருக்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஆறுதல்
சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செ.பெருமாள் வியாழன் அன்று மாரடைப்பால் காலமானார். அவருடைய உடலுக்கு
வியாழன் மாலை முதல் அமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இன்று தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சுபா, பார்த்திபன் உள்ளிட்ட சேலம் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இதேபோல் சேலம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவலிங்கம், பெருமாள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.