புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2013

,

இளவரசன் மரணம் ஒரு மர்மம்  : திருமாவளவன் பேட்டி
தர்மபுரியில் இளவரசன் -திவ்யா காதலர்கள் விவகாரத்தில் நேற்று இளவரசனை பிரிந்துவிடுவதாக கோர்ட்டில் திவ்யா உறுதியுடன் கூறினார். இந்நிலையில்
இன்று இளவரசன் தர்மபுரியில் அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே மரணம் அடைந்துள்ளார்.  இது கொலையா? தற்கொலையா? என்று சந்தேகம் நிலவி வருகிறது.

இது தொடர்பாக  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மாலை சென் னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ’’எந்த இடத்திலும் காயங்கள் இல்லை.  அவர் அடிபட்டு இறந்திருப்பதாக சொல்லப்படுகிற நேரத்தில் அந்த வழியே எந்த ரயிலும் போகவில்லை.  ஆகவே அவர் ரயிலில் அடிபட்டு சாவதற்கு, அல்லது அவரே ரயிலில் தற்கொலை செய்துகொல்வதற்கு  வாய்ப்புகள் மிகக்குறைவுதான் என்று தெரியவருகிறது.

  இந்த நிலையில் இளவசரன் சாவு குறித்து தமிழக அரசு நீதிபதி தலைமையின் கீழ் விசாரனை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.  மிகக்குறுகிய கால இடைவெளியில் இந்த விசாரணையை முடிக்கக்கூடிய அளவுக்கு அரசு ஆணையிட வேண்டும்’’என்று கூறினார். 

ad

ad