முன்னாள் பெண் போராளி தீ விபத்தில் சிக்கி மரணம்
இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கந்தசாமி புவனேஷ்வரி (வயது 23) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கல்கிஸை பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த இவர், அங்கு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக எரிகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த தீ விபத்துச் சம்பவம் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது