புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2013

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர்! பொலிஸ் விசாரணையில் சிக்கினார்
யாழ்.மாவட்டத்தில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்பிற்கும் ஆசிரியர் ஒருவர், மாணவிக்கு கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி வைத்தமை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆசிரியர் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவிக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த மாணவி இவ்விடயம் தொடர்பில் பெற்றோரிடம் முறையிட்டமையை அடுத்து, பெற்றோர் பாடசாலை நிர்வாகத்தினரிடம் இதனைத் தெரியப்படுத்தியுள்ளார்.
நிர்வாகத்தினர் தவறுதலாக நடந்த விடயம் எனவும் இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறி சமாதானப் படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இதன் பின்னரும் தொடர்ச்சியாக வேறு சிம் காட்டில் இருந்து குறிதத் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தியை அனுப்பி வைத்துள்ளார் அந்த ஆசிரியர்.
ஆசிரியரின் நடவடிக்கையினைப் பெறுக்க முடியாத மாணவியின் பெற்றோர், யாழ்.பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறையிட்டுள்ளனர்.
இந்த முறைப்பாட்டை அடுத்து குறித்த ஆசிரியர் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ad

ad