புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2013

,

மாஜி திமுக அமைச்சர் கோர்ட்டில் சரணடைந்தார்
தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் பழனிசாமி. இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, ஊழல் வழக்குகளை விசாரிக்கும் தனி கோர்ட்டில்
நடக்கிறது.  கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு, பிடி வாரன்ட் - பிரிசனர் டிரான்சிட் வாரன்ட், பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், காலை, கோர்ட் வளாகத்துக்கு வந்த பழனிசாமி, நீதிபதி முரளிதரன் முன், சரணடைந்தார்.  வக்கீல்களின் இரண்டு நாள் கோர்ட் புறக்கணிப்பைத் தொடர்ந்து, இன்று இவர் சார்பில் ஆஜராக வேண்டி, தி.மு.க., வழக்கறிஞர்கள், கோர்ட்டுக்குள் வரவில்லை. 
மாஜி அமைச்சரே, கோர்ட்டில் ஆஜராகி கடந்த வாய்தாக்கலில் தான் ஆஜராகாமல் இருந்ததற்கான காரணத்தை, கைப்பட எழுதி, தாக்கல் செய்தார்.
பிடிவாரன்டை ரத்து செய்த நீதிபதி, வரும் 23 ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

ad

ad