புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2013

,

புலிக்கொடியுடன் பிரித்தானியா கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்தவருக்கு சர்வதேச பிடியாண
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் பிரித்தானியா கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த இலங்கைத் தமிழருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் சர்வதேச பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.
கடந்த ஜுன் மாதம் 20ம் திகதி கார்டிப் மைதானத்தில் நடந்த போது புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட சர்வதேச திறந்த பிடியாணையை இன்று புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.
புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி குழப்பம் விளைவித்த லோகேஸ்வரின் மணிமாரன் என்பவருக்கே இவ்வாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம், லண்டன் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற போதே இவர் புலிக் கொடியுடன் மைதானத்திற்குள் அத்துமீறி  பிரவேசித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad