புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2013

சிரி­யாவின் டமஸ்கஸ் நகரின் புற­ந­கர் ­ப­கு­தியில் அந்­நாட்டுப் படை­யினர் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி புதன்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் 1000 இற்கும் மேற்பட்டோர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க செயற்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்கின்றனர்.
கோயுடா பிராந்­தி­யத்தில் புற­நகர் பகு­தியில் இர­சா­யன வெடி­குண்­டு­களை கொண்ட ஏவு­க­ணை­களை ஏவி தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில், தாம் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக கூறு­வது எது­வித அடிப்­ப­டை­யு­மற்ற குற்­றச்­சாட்­டு என சிரிய அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

கிழக்கு புற­ந­கரப் பகு­தி­க­ளி­லான சமல்கா, அர்பீன், என்­டர்மா ஆகிய பிராந்­தி­யங்­களில் உக்­கிர ஷெல் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.
சிரி­யாவின் தாக்­குதல் நட­வ­டிக்­கை­க­ளின்­போது இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் சம்­பந்­த­மாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் முக­மாக ஐக்­கிய நாடுகள் குழு­வொன்று சிரி­யா­வுக்கு விஜயம் செய்­துள்ள நிலை­யி­லேயே இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளன.
கடந்த மார்ச் மாதம் கான் அல் –- அஸ்ஸல் பிராந்­தி­யத்தில் 26 பேர் பலி­யா­கு­வ­தற்கு கார­ண­மாக அமைந்த தாக்­குதல் உட்­பட 3 இடங்­களில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களில் இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­ததா என்­பதைக் கண்­ட­றி­யவே மேற்­படி ஐக்­கிய நாடுகள் குழு சிரி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்­தது.
இந்த தாக்­கு­தல்­களில் காய­ம­டைந்­த­வர்கள் தற்­கா­லிக மருத்­து­வ­ம­னை­யொன்றில் சிகிச்சை பெறும் காட்­சிகள் யூரியூப் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. மேலும் படங்கள் பலவும் வெளியாகியுள்ளன.
பலி­யா­ன­வர்கள் மற்றும் காய­ம­டைந்­த­வர்­களில் பெண்­களும் சிறு­வர்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் பிந்­திய தாக்­கு­தலில் இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறு­வது ஐக்­கிய நாடுகள் இர­சா­யன ஆயு­தங்கள் தொடர்­பான விசா­ரணை ஆணை­யகத்தின் கடமைகளை நிறைவேற்றுவதை திசை திருப்பும் முயற்சி என சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிரி­யாவில் இடம்பெற்று வரும் மோதல்களில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்கப் படையினரும் கிளர்ச்சியாளர்களும் ஒருவரை யொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ad

ad