புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2013

கிழக்கு மாகாண சபையில் குழப்பம்
கிழக்கு மாகாண சபையில் இன்று குழப்பநிலை ஏற்பட்டதால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வினைப் பார்வையிடுவதற்கு வட மாகாண அமைச்சின் செயலாளர்கள் வருகை தந்திருந்தனர். இதனையடுத்தே இங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை கிழக்கு மாகாணசபைத் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இவ்வமர்வை வடமாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் குழுவினர் சபையில் அமர்ந்து பார்வையிட்டனர்.
இதனையடுத்து, கிழக்கு மாகாணசபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் ஜெயந்த விஜயசேகர,  குறித்த அதிகாரிகள் சபையினுள் அமர்த்தப்பட்டிருப்பது, சபையின் சட்டத்திற்கு முரணானது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, சபை நடவடிக்கைகள் 10 நிமிடத்திற் குஒத்தி வைக்கப்பட்டது.
அதன் பின்னர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சபை நடவடிக்கைகளை பார்வையார்கள் கலரியிலிருந்தே பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad