சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட விமானத்தில் கோளாறு:
165 பயணிகள் உயிர்தப்பினர்
165 பயணிகள் உயிர்தப்பினர்
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை ஐதராபாத்துக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டது. அதில் 165 பயணிகள் இருந்தனர்.
பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக் கப்பட்டு பொறியாளர்கள் வந்து விமானத்தை பார்வையிட்டு அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதேசமயம், அதில் செல்ல டிக்கெட் வாங்கியிருந்த 165 பயணிகளும் வேறு விமானம் மூலம் ஐதராபாத் துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தக்க சமயத்தில் கோளாறை விமானி கண்டுபிடித்து விமானத்தை நிறுத்தியதால், மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதுடன், பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.