புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2013

ஆசராம் பாபு இந்தூரில் இல்லை என போலீசார் தகவல்: ஆதரவாளர்கள் 6 பேரை கைது செய்த போலீசார்

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து சாமியார் ஆசராம் பாபுவை தேடி போலீசார் இந்தூர் வந்தனர். ஆனால் அவர் இந்தூரில் இல்லை என மாநகர போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார்.


உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது மாணவி, குஜராத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய சாமியார் ஆசராம் பாபு  தன்னை பலவந்தமாக கற்பழித்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பரபரப்பு புகார் கூறினார். இது தொடர்பான அவரது புகாரின்பேரில், சாமியார் மீது போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  இந்நிலையில், அவரை கைது செய்வதற்காக இந்தூரில் உள்ள அவரது ஆசிரமத்திற்கு போலீசார் சென்றனர்.  ஆனால் அவர் அங்கு இல்லை என்பது தெரிந்தது.  மேலும், தனியார் ஊடக செய்தியாளர் ஒருவரை ஆசராம் பாபுவின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக ஆதரவாளர்கள் 6 பேரை அவரது ஆசிரமத்தில் இருந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

ad

ad