புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2013


முதல்வரின் வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும்
 எனக்கு எப்போதும் பிடிக்கும் : நடிகர் விஜய்
 

கடந்த 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய "தலைவா', பாதுகாப்பு பிரச்னைகள், வரி விலக்கு கோரிக்கை நிராகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்டது. இதையடுத்து அப்படத்தை தமிழகத்தில் வெளிக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர்
செய்து வருகின்றனர்.


தமிழகத்தில் வெளியாகாவிட்டாலும் ஆந்திரம், கேரளம் மற்றும் வெளிநாடுகளில் திட்டமிட்டப்படி 9-ஆம் தேதி படம் வெளியானதால், தமிழகத்தில் தலைவா படத்தின் திருட்டு சி.டி.க்கள் வெளிவந்துள்ளன. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
 இது குறித்து நடிகர் விஜய் முதல்வர் ஜெயலலிதாவுக் கு கோரிக்கை விடுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், ’’திட்டமிட்டப்படி தமிழகத்தில் படம் வெளியாகாமல் இருப்பதால், திருட்டு சி.டி.க்களின் வருகை அதிகரித்துள்ளது. சேலத்தில் தலைவா படத்தின் திருட்டு சி.டி.க்கள் தயாரித்தவர்கள் பிடிப்பட்டுள்ளனர்.
 திருட்டு சி.டி.க்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை உடனடியாக  காவல்துறைக்கு தெரியப்படுத்த ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். என்.எல்.சி., காவேரி உள்ளிட்ட ஏராளமான பிரச்சனை களில் தமிழக முதல்வர் திறம்பட செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து வருகிறார். முதல்வரின் வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக் கும்.
எல்லோருக்கும் நல்லது செய்யும் முதல்வர் தலைவா' பட பிரச்சனையிலும் தலையிட்டு, விரைவில் தமிழகம் முழுவதும் தலைவா' படம் வெளிவர ஆவண செய்வார்கள். அதுவரை என்னை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகர்களும் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என அந்த செய்திக் குறிப்பில் விஜய் தெரிவித்துள்ளார்.

ad

ad