புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2013

கூட்டணி குறித்து முடிவெடுக்க கலைஞர், க.அன்பழகனுக்கு அதிகாரம்: மா.செ. கூட்டத்ததில் முடிவு
சென்னை அண்ணா அறிவாலயத்தல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக தலைவர்
கலைஞர் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் வரவிருக்கின்ற 16வது நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், அந்தத் தேர்தலில் கழகத்தின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்கள். மேலும் எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கத் தலைவர் கலைஞர் அவர்களுக்கும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களுக்கும் அதிகாரம் வழங்குவதென மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ad

ad