புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2013

நவநீதம்பிள்ளை திருமலை விஜயம் - மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார்.
அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு எதிரில் மக்கள்
ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆணையாளர் நவநீதம் பிள்ளை இன்று காலை திருகோணமலை மாவட்ட அரச அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மாவட்ட செயலகத்திற்கு எதிரில் கூடி காணாமல் போன தமது உறவுகளை கண்டுப்பிடித்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ad

ad