புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2013

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பதற்ற நிலை காணப்பட்ட போதிலும் தற்போது அங்கு ஓரளவு சுமுகநிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலை திருத்தியமைக்கும் பொருட்டு அதன் அருகில் உள்ள அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்படுவதற்கு முன்னர் அங்கு பௌத்த சமய வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad