புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2013

விஜய் உண்ணாவிரதத்துக்கு
போலீசார் அனுமதி மறுப்பு
 

விஜய் நடித்த தலைவா படம் தமிழகத்தில் வெளியாகவில்லை.  ஏன் வெளியாகவில்லை? என்ன நடக்கிறது என்று படம் எடுத்தவர்களே மண்டையை போட்டு பிய்த்துக்கொண்டிருக்கின்றனர். 



இந்நிலையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிட முன்வரதாததால்,  நடிகர் விஜய் தரப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்தது.
நடிகர் விஜய், சத்யராஜ், அமலா பால், படத்தில் நடித்த நடிகர் நடிகையர், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குனர் விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார், தொழில் நுட்பக் கலைஞர்கள் என பலரும் அரசு அனுமதி கொடுக்கும் இடத்தில் இன்று அல்லது நாளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறி ஆணையர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தனர்.
ஆனால், இந்த உண்ணாவிரதத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.

ad

ad