அங்கஜனின் தந்தை யாழ். பொலிஸாரால் கைது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையார் இராமநாதன், சுதந்திரக் கட்சியின் சக வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சாவகச்சேரியில் வைத்து சு.கட்சியின் வேட்பாளர் குமாரு சர்வானந்த் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாகவே சற்று முன்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாமம் மற்றும் சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிஹேரா தெரிவித்தார்.
இதேவேளை வடக்கில் அரசாங்க தரப்பினர்கள் தமக்குள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி