புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2013

த.தே.கூட்டமைப்பின் தலைமைப் பணிமனை “அறிவகத்தில்” முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், பா.உறுப்பினர் சிறீதரனை கனேடிய ஆலோசகர் சந்திப்பு
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பொருளாதார அரசியல் ஆலோசகரான மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைப் பணிமனையான “அறிவகத்தில்” பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நா.வை குகராசா, வட மாகாண சபைக்கான கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் த.குருகுலராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.சுரேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் வட மாகாண சபைத் தேர்தல் வன்முறைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது அண்மையில் நடைபெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவங்கள், பூநகரிப் பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் பச்சை உடை தரித்தோரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம், தமிழ் இளைஞன் ஒருவன் பரந்தன் பகுதியில் தாக்கப்பட்டமை மற்றும் நெடுந்தீவில் ஈபிடீபி ஒட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அராஜகங்கள் குறித்தும் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் வட மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் கலந்துரையாடியதுடன் தாங்கள் வடமாகாண சபைத் தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

ad

ad