புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2013

வவுனியாவில் கிழக்கு மாகாண எம்.பிகள் உச்சகட்ட பிரசாரத்தில்!- பாவற்குளத்தில் அரியம் எம்.பி தீவிர பிரசாரம்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெற இருக்கும் வடமாகாண சபைக்கான தேர்தலின் பிரசார நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருக்கும் இவ்வேளையில, கிழக்கு மாகாண ஜனநாயக போராளிகளும் வடக்கு பிரசார போர் முனையில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய பா.அரியநேந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.
வவுனியாவிற்கு விஜயம் செய்த இவர்கள்,  கடந்த 26ம் திகதி,  இலக்கம் 08ல் போட்டியிடும் வடமாகாணசபை வேட்பாளர் எம். எம். ரதனை, அவரது தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் எம்.எம் ரதனை ஆதரித்து, வாக்கு சேகரிக்கும் நோக்குடன் பாவற்குளத்தில் வீடு வீடாக சென்று வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இப்பிரசார நடவடிக்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞ்ஞர்கள் ஆகியோரும் ஈடுபட்டனர்.

ad

ad