புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2013

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் வவுனியா குருமண்காடு கலைமகள் திறந்தவெளி விளையாட்டரங்கில் இன்றுமாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
கூட்டமைப்பின் ஐந்து
கட்சித் தலைவர்களான இரா.சம்பந்தன் வீ.ஆனந்தசங்கரி தர்மலிங்கம் சித்தார்த்தன் சுரேஷ் பிரேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்ட தமிழ்; தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் மாலை அணிவிக்கப்பட்டு குருமண்காடு சந்தியிலிருந்து கலைமகள் திறந்தவெளி விளையாட்டரங்கிற்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது
இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட ஒன்பது வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள்.
இதனையடுத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் வீ.ஆனந்தசங்கரி தர்மலிங்கம் சித்தார்த்தன் சுரேஷ் பிரேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் யோகேஸ்வரன் அரியநேந்திரன் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சிப்பாடல் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த எழுச்சிப் பாடலானது வவுனியாவிலுள்ள உள்ளுர் இளைஞர்களாலேயே இயற்றப்பட்டு இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வுகளில் உள்ளுராட்சி சபை தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

ad

ad