புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2013

நடிகை கனகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் :
தந்தை தேவதாஸ் கமிஷனரிடம் புகார்
நடிகை கனகாவின் தந்தை தேவதாஸ் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அம்மனுவில், ‘’என் மனைவியும்
நடிகையுமான தேவிகா, மகள் கனகா பிறந்ததும் என்னிடம் ஒப்படைத் துவிட்டு சென்றுவிட்டாள். அதன்பிறகு கனகாவை கண்ணும்கருத்துமாக நான் வளர்த்து வந்தேன். இடை யில் என்னென்னவோ ஆகிவிட்டது. இந்நிலையில் என் மகள் என்னை சமூகத்தில் ஒரு தவறான மனிதனைப்போல சித்தரிக்கிறாள்.


நான் அவளை பைத்திரியக்காரி என்று சொல்லிவருவதாகவும், அவளது சொத்துக்களை அபகரிக்க முயலுவ தாகவும் அவதூறு பரப்பி வருகிறாள். இதனால் அவள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


மனு குறித்து போலீசார் விசாரணை செய்வதாக தேவதாஸிடம் வாக்குறுதி அளித்துள்ளனர்.

ad

ad