புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2013

ஷிராணி பதவி நீக்கம் தொடர்பான அறிக்கை பொதுநலாய நாடுகளின் செயலாளரின் கையில்!
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கைகளையும் அபிப்பிராயங்களை பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா பெற்று கொண்டுள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் செயலகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த ஆவணங்கள் கிடைக்கபெற்றதாக பொதுநலவாய அமைப்பின் தகவல் மற்றும் பொது விவகார செயலகததின் பணிப்பாளர் ரிச்சர்ட் உக்கு தெரிவித்தார்.
இந்த ஆவணங்கள் முக்கியமான அரசியல் சூழ்நிலைகளில் போது, உதவுவதற்கான பயனுள்ள தீர்மானங்களை எடுக்க பொதுநலவாய அமைப்பின் செயலகத்திற்கு உதவும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன் அமைப்பின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஆவணங்கள் பாதுகாப்பாக பேணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad