புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2013

ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட்
இலங்கை அகதிகளான செந்தூரன், ஈழ நேரு மற்றும் சவுந்தரராசன் ஆகியோரை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்தி வெளியானது. 


இந்நிலையில் ஈழ நேருவின் மனைவி சந்திரலீலா, இது தொடர்பாக ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன் கணவர் ஈழநேருவை இலங்கைக்கு அனுப்பினால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, ஈழ நேருவை இலங்கைக்கு அனுப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுதாரரின் புகார் தொடர்பாக மத்திய - மாநிலஅரசுகள் செப்டம்பர் 27-ம் தேதிக்குள் விளக்கம் பதில் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

ad

ad