புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2013

மன்னார் மற்றும் வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னார் பொது விளையாட்டரங்கில் நேற்று மாலை இடம்பெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்பதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

மன்னார் ஆயருடனான இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ சுமந்திரன், யோகேஸ்வரன், அரியநேந்திரன் மற்றும் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மன்னார் பொது விளையாட்டரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தலைமையில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது,
இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட எட்டு வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள்.
இதனையடுத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன், பி.அரியநேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா, வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
வவுனியா பன்றிக்கெய்தகுளம், பெரியமடு பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் நேற்றையதினம் வவுனியா பன்றிகெய்தகுளம் மற்றும் பெரியமடு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன
கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவனியா நகரசபையின் முன்னைநாள் உப தலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன், நண்பர்களும், ஆதரவாளர்களும், ஊர்ப் பிரமுகர்களும் பிரதேச மக்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளை நேற்று நடத்தியிருந்தனர்.

ad

ad