புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2013

வெலிவேரியவிற்கு செல்லுமாறு நானே படையினரிடம் கோரிக்கை விடுத்தேன்: ஞானசார தேரர்
தமது கோரிக்கைக்கு அமையவே பாதுகாப்பு படையினர் வெலிவேரிய போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சுத்தமான குடிநீரைக் கோரி வெலிவேரிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதனை அதாவனித்த நான், அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்தேன்.
போராட்டம் கலகமாக வெடிக்கக் கூடும் என்ற அச்சத்தினால் நான் அவ்வாறு படையினருக்கு அறிவித்தேன்.
பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு படையினரிடம் கோரியிருந்தேன்.
குடிநீர்ப் பிரச்சினை அடிப்படையானது எனவும் அதற் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் படையினரிடம் கோரியிருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இடம்பெற்ற துர்ப்பாக்கிய நிலைமை வருத்தமளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad